- திமுகா தெரு சந்தி பொது கூட்டம்
- கொட்டரக்குடி
- நாகப்பட்டினம்
- திருமாருகல்
- டிகா
- பாஜக
- திருமுருகல் யூனியன்
- ரவிச்சந்திரன்
- ஐரோப்பிய ஒன்றிய
- ஆணையாளர்
- ரமேஷ்
- மாநில ஒன்றியத்தின் செயலாளர்
- திமுகா தெரு சட்டமன்றம்
- தின மலர்
நாகப்பட்டினம், மார்ச்11: பாசிச ஆட்சி நடத்தும் பாஜகவை வீழ்த்திட திக சார்பில் திருமருகல் அருகே கொட்டாரக்குடியில் தெருமுழக்க பொதுக்கூட்டம் நடந்தது. திருமருகல் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய தணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ். சரவணன், திக மாவட்ட துணை தலைவர் பொன் செல்வராசு, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், திக நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் புபேஷ்குப்தா, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், தலைமை கழக பேச்சாளர் பெரியார்செல்வன், திமுக தலைமைக் கழக பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் பேசினர். மத்தியில் ஆட்சி செய்யும் பாசிச பாஜக ஆட்சி வீழ்த்த வேண்டும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திக நாகபட்டினம் மாவட்ட தலைவர் நெப்போலியன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகபொன்முடி, சட்ட கல்லூரி மாணவர் மாநில கழக அமைப்பாளர் இளமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post கொட்டாரக்குடியில் திமுக தெருமுனை பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.